வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைகிறது. வருகிற 2, 3-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 6 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கான மஞ்சள் ‘அலர்ட்’டும் விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை தீவிரம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முழுவதுமாக நீங்கி, கடந்த 28-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் வடமாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், தென்மாவட்டங்களில் இயல்பை விட சற்று குறைவாகவும் பெய்யும் என்று ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை, திருவள்ளூர் உள்பட வடமாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த 28-ந்தேதி இரவு முதல் 29-ந்தேதி பிற்பகல் வரை மழை கொட்டியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai