கடந்த 1992-ம் ஆண்டில்தான் முதன்முதலில் வணிக ரீதியாக எஸ்.எம்.எஸ். சேவை தொடங்கியது. ஆனால், அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள்தான் தற்போதும் உள்ளன. அதே எழுத்து வடிவம்தான். அதற்குப்பிறகு வந்த எம்.எம்.எஸ். சேவையும் பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை.
மாறாக வாட்ஸ்-அப், மெசெஞ்சர் போன்ற ‘இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்’கள் அந்த இடத்தை பிடித்துவிட்டன. இன்றைக்கு வங்கி, ஷாப்பிங் போன்ற வணிகரீதியான சேவைகளில்தான் அதிக அளவில் எஸ்.எம்.எஸ். பயன்பட்டு வருகிறது. மற்றபடி பெரும்பாலான தகவலுக்கு வாட்ஸ்-அப்தான்.
எனவே வாட்ஸ்-அப் வருகையால், எஸ்.எம்.எஸ். மூலம் வருமானம் பார்த்துவந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இதற்கு தீர்வாக ஆர்.சி.எஸ். எனப்படும் ‘ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது.
‘ஆர்.சி.எஸ்.’ என்பது வெறும் எஸ்.எம்.எஸ். மட்டும் அல்ல. வாட்ஸ்-அப் போலவே இதிலும் படங்கள் அனுப்பலாம், வீடியோக்கள் ஷேர் செய்யலாம். குரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், கியூ.ஆர். கோடு போன்ற அனைத்தையும் பயன்படுத்த முடியும். கூடவே உதவுவதற்காக கூகுள் அசிஸ்டன்ட், இன்ஸ்டன்ட் ரிப்ளை செய்ய ஏ.ஐ. என்ற நுட்பம், சாட் செய்யும் நபர் ஆன்லைனில் இருக்கிறாரா எனப் பார்க்க உதவும் வசதி, நிறுவனங்கள் அனுப்பும் மெசேஜை ‘வெரிபைய்ட்’ அக்கவுண்ட்கள் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளும் அம்சம் என அனைத்தும் இருக்கும். இத்துடன் வீடியோ கால் வசதியும் இணைக்கப்படலாம். இது அனைத்தும் நாம் தற்போது எஸ்.எம்.எஸ். அனுப்ப பயன்படுத்திக் கொண்டிருக்கும் ‘மெசேஜஸ் ஆப்’லேயே செய்யமுடியும்.
இதனை சாத்தியமாக்க வேண்டும் என்றால், இணைய வசதியும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் தேவை. இந்த வசதி தற்போது ஐமெசேஜ் ஆப்பில் உள்ளது. ஆனால் ஆன்ராய்டு தளத்தில் இதுவரை இல்லை. இதை கொண்டு வரப்போகிறது கூகுள். இதை சாத்தியமாக்கிட கூகுள், 55 தொலைதொடர்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து உள்ளது.
‘சாட்’ என்ற பெயரில் ‘ஆர்.சி.எஸ்.’ வசதியை கூகுள் நிறுவனம் தனது ஆன்ராய்டு தளத்தில் கொண்டு வர போகிறது. இதற்காக இந்தியாவில், முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட கூகுள் முடிவு செய்துள்ளது. எனினும் இந்தியாவில் இத்திட்டம் முழுமையாக வருவதற்கு சில காலம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai
Sunday, July 14, 2019
Saturday, July 6, 2019
தொலைக்காட்சிப் பெட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்...
டிவி வாங்க நினைக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் டி.வி. நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
எல்.இ.டி. (லைட்- எமிட்டிங் டையோட்) டிவிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குள் ஓ.எல்.இ.டி. (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) பேனல்களுடன் டி.வி.க்கள் அறிமுகமாகி விட்டன.
இவ்வகை ஓ.எல்.இ.டி. பேனல்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதுடன் அவற்றிற்கு பேக்லைட்டே தேவையில்லை. இதன் மின் நுகர்வு குறைவு. எல்..சி.டி. மற்றும் எல்.இ.டி. டி.வி.களுடன் ஒப்பிடும் பொழுது எடை குறைவாக ஸ்லிம் அண்டு ஸ்லெண்டராக இருக்கின்றது. டிஸ்ப்ளேயும் மற்ற டி.வி.க்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் க்யு.எல்.இ.டி. டிவிக்களின் தொழில்நுட்பமும் அதிக ப்ரைட்னஸுடன் படங்களை வெளிப்படுத்துகின்றன.
ஹெச்.டி.ஆர். அதாவது ஹை டைனமிக் ரேன்ஜ் பயன்படுத்தி வந்துள்ள டி.வி.கள் பிக்சர் குவாலிட்டியில் அதிக மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவென்றால் கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றம் கலர் அக்யூரசி. எனவே, படத்தின் பிரகாசமான பாகங்கள் இன்னும் தெளிவாகவும், ஆழமாகவும், துல்லியமாகவும் தெரிகின்றன. இத்தொழில்நுட்பத்தில் 4கே ரெசல்யூசனுடன் திரைப்படங்களைப் பார்க்கும் பொழுது திரையரங்கில் பார்ப்பது போன்ற அனுபவத்தை தருகின்றன.
3டி தொழில்நுட்பத்துடன் இருக்கும் டி.வி.க்களை யோசனையுடன் வாங்கிவிட்டால் மூன்று பரிணாமங்களில் எடுக்கப்படும் திரைப்படங்களைத் தத்ரூபமாகப் பார்க்கலாம்.
அதே போல் ஸ்மார்ட் டி.வி.க்களில் நம்முடைய லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களில் இருக்கும் அனைத்து வசதிகளையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இவ்வகை டி.வி.க்களை இணையதளத்துடன் இணைத்து கொண்டு நம்முடைய அலுவலக வேலைகள், யூடியூப் பார்ப்பது, கூகுல் சர்ச் என்று அனைத்தையும் செய்யலாம். மேலும் வீட்டில் உள்ள ஸ்மார்ட் போன், டேப்ளட்ஸ் மற்றும் வேறு எலக்ட்ரானிக் சாதனங்களையும் ஸ்மார்ட் ஷேரிங் அப்ளிகேஷன் மூலம் டி.வி.யுடன் இணைத்துக் கொண்டு பெரிய திரையிலேயே வீடியோஸ், புகைப்படம், திரைப்படம் என அனைத்தையும் காணலாம்.
ஐம்பது ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய டி.வி. வினாடிக்கு இருநூற்று நாற்பது ஹெர்ட்ஸ் எண்ணிக்கையில் மிகத்துல்லியமான மங்கலற்ற படங்களை காட்டுகின்றன.
டி.வி. திரைகளின் அளவுகள் 32 இன்ச், 45 இன்ச், 49 இன்ச், 55 இன்ச், 50 இன்ச், 65 இன்ச் என பல்வேறு டி.வி. நிறுவனங்களில் சற்றே மாறுபடுகின்றன.
மேலும், ஒவ்வொரு டி.வி. நிறுவனமும் புதுப்புது தொழில்நுட்பங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் மனதைக் கவர போட்டி போடுகின்றனர்.
டி.வி. திரையானது வளைந்து, ஒருமுறையில் எங்கிருந்து டி.வி.யை பார்த்தாலும் நேராக இருந்து பார்ப்பதைப் போன்று தொழில்நுட்பமும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
தொலைக்காட்சியில் வரும் ஒலி, ஒளியானது மிகத்துல்லியமாகவும், பிரகாசமாகவும் இருப்பதைத்தான் வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் மின் நுகர்வு மற்றும் மின் செலவு சேமிப்பாகும்.
நம் குரல் மற்றும் முகத்தை அடையாளம் கண்டு கொண்டு செயல்படக்கூடிய தொலைக்காட்சி பெட்டிகள் சந்தையில் வந்து விட்டாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு முறை டி.வி. பார்த்து விட்டு அணைக்கும் பொழுதும் டி.வி. ஸ்விட்சையும் அணைக்க வேண்டும்.
உகந்த பிரகாசத்துடன் டி.வி.திரையில் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்ப்பதன் மூலம் கண்களில் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
டி.வி.யிலிருந்து அதிக வெப்பமானது வெளிப்படுவதால், டி.வி. அதிகம் இடுக்கலான இடங்களில் அல்லது மிகவும் சுவருடன் ஒட்டி வைக்காமல் சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
டி.வி. திரைகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் கூர்மையான பொருள்களை டி.வி. திரைகளுக்கு அருகில் கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது. டி.வி. திரையில் ஏற்படும் சிறு கீறல் கூட நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
Wednesday, July 3, 2019
உலகின் முதலாவது ஐந்தாம் தலைமுறை லேப்டாப்
மின்னணு பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் லெனோவா நிறுவனம் உலகின் முதலாவது 5-ஜியில் (ஐந்தாம் தலைமுறை) செயல்படும் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
இது ஸ்னாப்டிராகன் 8சி.எக்ஸ்.எஸ்.ஓ.சி. பிராசஸரைக் கொண்டது. இதன் செயல்திறன் 2.75 கிகா ஹெர்ட்ஸாகும். இதில் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடம் உள்ளது. இது 5-ஜி அலைக்கற்றை இணைப்பு வசதியை பெற உதவும். இந்த லேப்டாப் 14 அங்குல திரையைக் கொண்டு உள்ளது.
உலகின் முதலாவது 5-ஜி லேப்டாப் இது என இந்நிறுவனம் பெருமைபட ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நாள் விரைவில் வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது ஸ்னாப்டிராகன் 8சி.எக்ஸ்.எஸ்.ஓ.சி. பிராசஸரைக் கொண்டது. இதன் செயல்திறன் 2.75 கிகா ஹெர்ட்ஸாகும். இதில் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடம் உள்ளது. இது 5-ஜி அலைக்கற்றை இணைப்பு வசதியை பெற உதவும். இந்த லேப்டாப் 14 அங்குல திரையைக் கொண்டு உள்ளது.
உலகின் முதலாவது 5-ஜி லேப்டாப் இது என இந்நிறுவனம் பெருமைபட ஷாங்காய் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நாள் விரைவில் வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோலார் பிளாஷ் லைட்

அதேபோல இதில் யு.எஸ்.பி. கேபிள் உள்ளது. இதனால் வேறு சில கருவிகளையும் அவசரத்துக்கு இதன் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். போன், ரேடியோ, எல்.இ.டி. விளக்கு, சிறிய பேன், டேப்லெட், ஜி.பி.எஸ். கருவிகள், மியூசிக் பிளேயர், ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றையும் இதன் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். மலையேற்றம், காடுகளில் சாகச பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் உபயோகமானது. ஆபத்து காலத்தில் தகவல் தெரிவிக்க இதில் சிவப்பு விளக்கு எச்சரிக்கை வசதியும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப்லெட்

கூல்பேட் கூல் 3 பிளஸ்

இந்த ஸ்மார்ட்போன் குவாட் கோர் 2.0 கிகாஹெர்ட்ஸ் பிராசஸரை உடையது. 3 ஜி.பி. ரேம் வசதியோடு 5.7 அங்குல டியூடிராப் தொடு திரையைக் கொண்டுள்ளது. இரண்டு கண்கவர் வண்ணங்களில் அதாவது ஓஷன் புளூ, செர்ரி பிளாக் ஆகிய நிறங்களில் வந்துள்ளது. இதில் ஒரு ஸ்மார்ட்போன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவக வசதியோடும் மற்றொன்று 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதியோடும் வந்துள்ளது.
இவற்றின் விலை முறையே ரூ.6,000 மற்றும் ரூ.6,500 ஆகும். அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திஉள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கூல்பேட் நிறுவனம் ஏற்கனவே பல ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கூல்பேட் கூல், கூல்பேட் மெகா, கூல்பேட் நோட் சீரிஸ் ஆகியன இந்நிறுவனத் தயாரிப்புகளாகும்.
தற்போது அறிமுகமாகிஉள்ள கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மேம்பட்ட தயாரிப்புகளை அளிக்க வேண்டும் என்ற நிறுவனத்தின் முயற்சி வெளிப்பட்டுள்ளது. 8.2 மி.மீ தடிமன் கொண்டதாக எடை குறைவானதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விரல் ரேகை சென்சார் மற்ற மாடல்களில் உள்ளதைவிட 12 சதவீதம் விரைவாக செயல்படக் கூடியது. இதில் 5.0 புளூடூத் இணைப்பு, வை-பை, ஜி.பி.எஸ்., கிராவிடி சென்சார், லைட் சென்சார், பிராக்ஸிமிடி சென்சார் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை பதிவு செய்ய வசதியாக இதில் 13 மெகா பிக்ஸெல் கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வசதியோடு வந்துள்ளது. செல்பி பிரியர்களுக்காக 8 மெகா பிக்ஸெல் கேமரா முன்பக்கம் உள்ளது. குறைந்த விலையில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என நிச்சயம் நம்பலாம்.
லெனோவா இஸட்6 புரோ
லெனோவாநிறுவனம் புதிதாக 5- ஜியில் செயல்படும் ஸ்மார்ட்போனையும் இஸட்6 புரோ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்5 மோடம் வசதி உள்ளது. இதன் தொடுதிரை அமோலெட் (6.39 அங்குலம்) நுட்பம் கொண்டது. இதன் பிராசஸர் 855 எஸ்.ஓ.சி. கொண்டது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.
இதன் பின்பகுதியில் நான்கு கேமராக்கள் உள்ளன. இவை முறையே 48 மெகா பிக்ஸெல், 16 மெகா பிக்ஸெல், 8 மெகா பிக்ஸெல் மற்றும் 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்டவை. மொத்தம் 74 மெகா பிக்ஸெல் இருப்பதால் கேமராவுக்கு நிகரான துல்லியமான படங்கள் இதில் பதிவாகும். முன்பகுதியில் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது செல்பி பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும்.
ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ள இதில் இரட்டை சிம் வசதி உள்ளது. வை-பை 802.11, புளூடூத் 5.00, யு.எஸ்.பி. டைப் சி மற்றும் 4 ஜி சப்போர்ட் வசதி ஆகியன இதில் உள்ளன. ஆக்ஸிலரோமீட்டர், லைட் சென்சார், கம்பாஸ், மாக்னெடோமீட்டர், கைராஸ்கோப், பிராக்ஸிமிடி சென்சார், விரல் ரேகை பதிவு சென்சார் ஆகியன உள்ளன. பேஸ் அன்லாக் வசதியும் இதில் உள்ளது.
இதன் பின்பகுதியில் நான்கு கேமராக்கள் உள்ளன. இவை முறையே 48 மெகா பிக்ஸெல், 16 மெகா பிக்ஸெல், 8 மெகா பிக்ஸெல் மற்றும் 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்டவை. மொத்தம் 74 மெகா பிக்ஸெல் இருப்பதால் கேமராவுக்கு நிகரான துல்லியமான படங்கள் இதில் பதிவாகும். முன்பகுதியில் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது செல்பி பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும்.
ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ள இதில் இரட்டை சிம் வசதி உள்ளது. வை-பை 802.11, புளூடூத் 5.00, யு.எஸ்.பி. டைப் சி மற்றும் 4 ஜி சப்போர்ட் வசதி ஆகியன இதில் உள்ளன. ஆக்ஸிலரோமீட்டர், லைட் சென்சார், கம்பாஸ், மாக்னெடோமீட்டர், கைராஸ்கோப், பிராக்ஸிமிடி சென்சார், விரல் ரேகை பதிவு சென்சார் ஆகியன உள்ளன. பேஸ் அன்லாக் வசதியும் இதில் உள்ளது.
எல்.ஜி. ஸ்மார்ட்போன் - எல்.ஜி. டபிள்யூ10, டபிள்யூ 30 மற்றும் எல்.ஜி. டபிள்யூ30 புரோ
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் டபிள்யூ. சீரிஸில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி. டபிள்யூ10, டபிள்யூ 30 மற்றும் எல்.ஜி. டபிள்யூ30 புரோ ஆகிய மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ.) கொண்ட மாடலாக இவை வந்துள்ளன. இதனால் நைட் மோட், போர்ட்ரைட், பொகே, வைட் ஆங்கிள் ஆகிய மோட் வசதிகள் உள்ளன. ஹெச்.டி. புல் விஷன் டிஸ்பிளே (தொடுதிரை) வசதி கொண்டது. நீண்ட நேரம் செயலாற்ற இதில் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.
இதில் டபிள்யூ 10 மற்றும் டபிள்யூ 30 மாடல் உடனடியாக விற்பனைக்கு வந்துள்ளன. டபிள்யூ 30 புரோ மாடல் பின்னர் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் எல்.ஜி. டபிள்யூ மாடல் விலை ரூ.9 ஆயிரமாகும். டபிள்யூ 30 மாடல் விலை ரூ.10 ஆயிரமாகும். எல்.ஜி. டபிள்யூ 30 மாடலில் 6.26 அங்குல திரை உள்ளது. டபிள்யூ 10 மாடல் 6.19 அங்குல திரையைக் கொண்டது. இவை இரண்டுமே மீடியா டெக்ஹீலியோ பி22 பிராசஸரைக் கொண்டது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதி உள்ளது.
டபிள்யூ 30 மாடலில் 3 கேமராக்கள் உள்ளன. முதலாவது கேமரா 12 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. இரண்டாவது 13 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. மூன்றாவது கேமரா 2 மெகா பிக்ஸெல்லைக்கொண்டது. ஆகமொத்தம் 27 மெகா பிக்ஸெல் கேமராக்கள் பின்பகுதியில் உள்ளன. முன்பகுதியில் செல்பி பிரியர்களுக்காக 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.
டபிள்யூ 10 மாடலில் இரட்டை கேமரா உள்ளது. இதில் முதலாவது 13 மெகா பிக்ஸெல்லும், இரண்டாவது 5 மெகா பிக்ஸெல்லும் கொண்டது. முன்பகுதியில் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் செயல்படுபவையாகும்.
பிரீமியம் மாடலான எல்.ஜி. 30 புரோ மாடல் 6.21 அங்குல திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் திறனை அதிகரித்துக் கொள்ள மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதியும் உள்ளது. இதன் பின்பகுதியில் 3 கேமராக்கள் உள்ளன. முதலாவது கேமரா 13 மெகா பிக்ஸெல்லும், இரண்டாவது 5 மெகா பிக்ஸெல்லும், மூன்றாவது 8 மெகாபிக்ஸெல்லும் கொண்டவை. முன்பகுதியில் 16 மெகாபிக்ஸெல் கேமரா உள்ளது.
இதில் டபிள்யூ 10 மற்றும் டபிள்யூ 30 மாடல் உடனடியாக விற்பனைக்கு வந்துள்ளன. டபிள்யூ 30 புரோ மாடல் பின்னர் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் எல்.ஜி. டபிள்யூ மாடல் விலை ரூ.9 ஆயிரமாகும். டபிள்யூ 30 மாடல் விலை ரூ.10 ஆயிரமாகும். எல்.ஜி. டபிள்யூ 30 மாடலில் 6.26 அங்குல திரை உள்ளது. டபிள்யூ 10 மாடல் 6.19 அங்குல திரையைக் கொண்டது. இவை இரண்டுமே மீடியா டெக்ஹீலியோ பி22 பிராசஸரைக் கொண்டது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதி உள்ளது.
டபிள்யூ 30 மாடலில் 3 கேமராக்கள் உள்ளன. முதலாவது கேமரா 12 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. இரண்டாவது 13 மெகா பிக்ஸெல்லைக் கொண்டது. மூன்றாவது கேமரா 2 மெகா பிக்ஸெல்லைக்கொண்டது. ஆகமொத்தம் 27 மெகா பிக்ஸெல் கேமராக்கள் பின்பகுதியில் உள்ளன. முன்பகுதியில் செல்பி பிரியர்களுக்காக 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.
டபிள்யூ 10 மாடலில் இரட்டை கேமரா உள்ளது. இதில் முதலாவது 13 மெகா பிக்ஸெல்லும், இரண்டாவது 5 மெகா பிக்ஸெல்லும் கொண்டது. முன்பகுதியில் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் செயல்படுபவையாகும்.
பிரீமியம் மாடலான எல்.ஜி. 30 புரோ மாடல் 6.21 அங்குல திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் திறனை அதிகரித்துக் கொள்ள மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதியும் உள்ளது. இதன் பின்பகுதியில் 3 கேமராக்கள் உள்ளன. முதலாவது கேமரா 13 மெகா பிக்ஸெல்லும், இரண்டாவது 5 மெகா பிக்ஸெல்லும், மூன்றாவது 8 மெகாபிக்ஸெல்லும் கொண்டவை. முன்பகுதியில் 16 மெகாபிக்ஸெல் கேமரா உள்ளது.
லாஜிடெக்கின் ‘ஜி’-புதிய ரக மவுஸ்

Tracksafe - குழந்தைகளை கண்காணிக்க உதவும் ‘டிராக்சேப்’
அந்தக் காலங்களில் கோவில் திருவிழா சமயங்களில் கூட்ட நெரிசலில் குழந்தைகள் தொலைந்துவிடாமல் இருக்க குடும்பத் தலைவன் தோள் மீது குழந்தையை தூக்கி உட்கார வைத்தபடி செல்வார்கள். இப்போது குழந்தைகளே தனியாக நடந்து வர விரும்பும் கால மாகும். இதனால் தூரத்திலிருந்தாவது பெற்றோர்கள் கண்காணிப்பில் குழந்தைகள் இருப்பது நல்லது.
தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு 18 குழந்தைகள் காணாமல் போகிறார்கள் என்ற செய்தி, குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு மிகுந்த கவலையளிக்கும். இதைப் போக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஜி.பி.எஸ். வசதி கொண்ட டிராக்சேப் ( Tracksafe ) எனும் சிறிய கைக்கடிகார வடிவிலான சாதனம் வந்துள்ளது. இதனை கையில் கட்டி விட்டாலே போதுமானது.
இதில் ஜி.பி.எஸ். டிராக்கிங் வசதி இருப்பதால் இருக்குமிடத்தை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். குழந்தைகள் ஆபத்தை உணர்ந்தால் இதில் உள்ள பொத்தானை அழுத்தினாலே (எஸ்.ஓ.எஸ்.) அவசர உதவிக்கு இருக்குமிடத்துக்கு சென்றுவிட முடியும். குழந்தையின் இருப்பிடத்தை அறிவதோடு, அவர்களிடம் பேசவும் முடியும்.
இதில் உள்ள பேட்டரி நீண்ட நேரம் உழைக்கும். உபயோகத்தில் இல்லாத நிலையில் 50 மணி நேரம் இது தாக்குப்பிடிக்கும். வழக்கமான உபயோகத்தில் 12 மணி நேரம் இது நீடித்திருக்கும். இதில் தேதி, நேரம் ஆகியனவும் டிஜிட்டல் முறையில் பதிவாகியிருக்கும்.
இது இரண்டு விதமானது. முதலாவது டிராக்சேப் கருவி. இதில் உள்ள ஹார்ட்வேர், உங்கள் மொபைலில் உள்ள சாப்ட்வேருடன் இணைக்கப்படும். இதன் பிறகு இதில் உள்ள ஜி.பி.எஸ். டிராக்கிங் வசதி மூலம் உங்கள் குழந்தை எங்கிருக்கிறார் என்பதை கண்காணிக்க முடியும். குழந்தைகளுக்கு தனியாகவும், செல்லப் பிராணிகளுக்கு தனியாகவும், வயதானவர்களுக்கு தனியாகவும் இந்த கருவி வந்துள்ளது. சிறிய குழந்தைகளுக்கான டிராக்சேப் விலை ரூ.2,500.
சிறிய ரக ஸ்மார்ட் மின்விசிறி ‘பாப்பு’

பிலிப்ஸின் நவீன பல்பு
வீ டுகள், அலுவலகங்களுக்கு ஒளியூட்டியதில் பிலிப்ஸ் நிறுவனத்தின் பங்கு மகத்தானது. மருத்துவம் சார்ந்த கருவிகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்போது ‘சோம்நியோ’ என்ற பெயரில் புதிய ரக பல்பை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரவில் தூங்குவதற்கும், பகலில் கண் விழிப்பதற்கும் உரிய வெளிச்சத்தை இது வீசக் கூடியது. தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் உபயோகமானது. இதில் வெளிப்படும் வெளிச்சம், தூக்கத்தை மேலும் தூண்டுவதாக அமைந்து உள்ளது.
அதேபோல விடியற்காலையில் தூங்கி கண்விழிக்கும்போது ரம்மியமான வெளிச்சத்தையும் இது ஒளிரக் கூடியது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது வீசும் ஒளிக்கற்றைகளை இது வீசும். அதேபோல மிகவும் இனிமையான இசையும் இதிலிருந்து வெளிப்படும். ஸ்மார்ட்போனை யு.எஸ்.பி. மூலம் இதிலிருந்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஜியோமியின் டிரிம்மர்

Subscribe to:
Posts (Atom)