சர்தார் வல்லபாய் படேல் நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு தந்தி வந்தது. படேல் அதை வாங்கிப் படித்துவிட்டு தன் கோட் பைக்குள் திணித்துக்கொண்டு வாதத்தைத் தொடர்ந்தார். நீதிமன்றம் கலைந்தபின்பு அவரை தனியே அழைத்த நீதிபதி, ‘‘என்ன செய்தி?’’ என்று கேட்டார். படேல் சிறிதும் பதற்றப்படாமல், ‘‘எனது மனைவி ஜவேரிபாய் இறந்துவிட்டார். நான் கிளம்புகிறேன்’’ என்றார். நீதிபதி திகைத்துவிட்டார். படேல் தான் ஓர் இரும்பு மனிதர் என்பதை இச்சம்பவத்தில் நிரூபித்தார்.
Comments