வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இது 30-ம் தேதி அதிகாலை மியான்மர் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக வடகிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை. மீனவர்கள் 31-ம் தேதி வரை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். அதற்காக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு வழக்கமான தேதியைவிட 3 நாட்கள் முன்னதாக தொடங்கியுள்ளது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச
Comments