உலகின் மூன்றாவது பெரிய சூரிய ஆற்றல் சந்தையாக இந்தியா 2017-ம் ஆண்டில் உருவெடுத்திருக்கிறது. சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தைச் சென்ற ஆண்டு பிடித்திருப்பதாக ‘மெர்காம் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டில் இந்தியா 9.6 GW சூரிய ஆற்றல் நிறுவல்களைச் செய்திருக்கிறது. 2016-ம் ஆண்டில் நிறுவப்பட்ட 4.3 GW சூரிய ஆற்றலுடன் ஒப்பிடும்போது, சென்ற ஆண்டு சூரிய ஆற்றல் வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இதனால், இந்தியாவின் ஒட்டுமொத்த சூரிய ஆற்றல் திறன் டிசம்பர் 2017-ம் 19.6 GW ஆக அதிகரித்திருக்கிறது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச
Comments